BGM 2019 All Banner

'நாங்க எதையும் ஆரம்பிக்கமாட்டோம்',ஆனா...தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டோம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 21, 2018 12:30 PM
We will stand up for self-respect says Kohli

நாங்கள் நிதானத்தோடே செயல்படுவோம் ஆனால் எதிர் அணி வீரர்கள் எங்கள் தன்மானத்தை சீண்டினால் நங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 இன்று பிர்ஸ்பேனில் நடைப்பெற உள்ளது.இதனால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கோலி "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது நாங்களாக எதையும் துவங்கமாட்டோம், அதே நேரம் தன்மானத்துக்கு பிரச்னை வந்தால் விட மாட்டோம் என தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில் ''ஆக்ரோஷம் என்பது களத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தே உள்ளது. எதிரணி வீரர்கள் அப்படி செயல்படும் போது அதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் நமது அணி வீரர்கள் எப்போதும் அவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.ஆனால் தன்மானத்துக்கு பிரச்னை வந்தால் சும்மா விட மாட்டோம்'' என தெரிவித்தார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #BCCI #T20 #AUSTRALIA