‘மனைவியை கொல்லணும்.. 2 நாள் லீவு வேணும்’.. வங்கி அதிகாரியின் பரபரப்பு லீவு லெட்டர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 27, 2019 04:36 PM

வங்கி ஊழியர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ய விடுமுறை கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

\'need 2 days leave to kill my wife\', man writes letter to his office

பீஹார் மாநிலம் பக்ஸர் பகுதியில் முன்னா என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி முன்னா பிரசாத் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் தனது மனைவியின் சிகிச்சைக்காக முன்னா அடிக்கடி வங்கியில் விடுப்பு எடுத்துள்ளார். ஒரு ஆண்டில் வங்கியில் வழங்கப்படும் விடுப்பு அளவைவிட அதிகமாக முன்னா விடுப்பு எடுத்ததால் மேலும் விடுப்பு வழங்க வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனையடுத்து முன்னா தனது மனைவியை கொலை செய்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என விடுப்பு தராத விரக்தியில்  வங்கி மேல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தின் நகலை பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அலுவலகம் மற்றும் பாட்னாவிலுள்ள வங்கி தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் முன்னாவிற்கு உடனடியாக விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. முன்னா எழுதிய இந்த கடிதத்தினால் வங்கி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LETTERS #WIFE #BANK #LEAVE