96 India All Banner
Ratsasan All Banner

டெல்லியில் அடுத்த கொடூரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 10, 2018 01:28 PM
Couple, Daughter Found Dead In South Delhi Home

டெல்லியில் கடந்த ஜூன் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தார்கள்.11 பேரும் ஒரே விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கருதப்பட்டது.இருந்த போதும் காவல்துறையினரால் தெளிவான ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

 

வெகு நாட்களாக நிலவிய மர்மத்திற்கு பிறகு தற்போது தான் அது தற்கொலை அல்ல  விபத்து என தெரியவந்தது.அதீத மாந்திரிக காரியங்களில் நாட்டம் கொண்ட அவர்கள் சடங்கு ஒன்றை நிறைவேற்றும் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்து இருக்கிறார்கள் என்று காவல்துறையின் அறிக்கையில் தெரியவந்தது.இந்த கொடூர மரணத்தை டெல்லி வாசிகளால் இன்னும் மறக்க முடியவில்லை.அதற்குள் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

தெற்கு டெல்லியில்,வசந்த் குஞ் பகுதியில் வசிக்கும்  40 வயது மதிக்கத்தக்க மிதிலேஷ்,ஷீயா  தம்பதியர் மற்றும் அவர்களின் 16-வயது மகளும்,கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.அவர்களது 19-வயது மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.   

 

இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில்,காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார்கள்.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தம்பதியரின் மகன் சுயநினைவிற்கு வந்த பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தார்கள்.ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெற்கு டெல்லி வாசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.