BGM 2019 All Banner

கொலை செய்வதற்கு முன் 108 முறை காளி மந்திரத்தை சொல்லும் சீரியல் கில்லர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 21, 2018 10:16 PM
This Serial Killer confesses that he chanted Kali mantra before kills

ஹரியானாவை சேர்ந்த 7 முதல் 8 பேர் வரை கொலை செய்த விநோதமான தொடர் கொலையாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

 

கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சின்ஹா என்பவர் போலீஸில் அகப்பட்டுக்கொண்டார்.  கிட்டத்தட்ட 500 முதல் 600 கொள்ளை சம்பவங்களையிம் ஏழெட்டு கொலைகளையும் செய்துள்ள சின்ஹா இதுவரை தன் கைவரிசையை பஞ்சாப், குருஷேத்ரா, ஃபரிதாபாத், பல்வாள் உள்ளிட்ட ஊர்களில் காட்டியுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

முக்கியமாக, தான் ஒவ்வொருவரையும் கொலை செய்வதற்கு முன்பாகவும் 108 முறை காளி மந்திரத்தை உச்சரித்துவிட்டு தான் செய்யப் போகும் பாவத்தை முன்னமே கழித்துவிட்டுதான் கொலை செய்ததாக பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளதுதான் அனைவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #MURDERER #CONFESS #POLICE #CRIME #KILLER #CHANTING #KALIMANTRA #CURSE