‘மேட்ச் வின்னராக இருப்பார், உலகக் கோப்பையில் இவரின் சேவை நிச்சயம் தேவை’.. கருத்து கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 15, 2019 12:06 PM

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான ரிஷப் பண்ட் நிச்சயம் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.

Rishabh pant should be in india\'s world cup squad, Says nehra

உலக கோப்பை கிரிக்கெட் வரும் மே மாதம் இங்கிலாந்த்தில் நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு அணியைப் பொறுத்தவரை நிறைய பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சில குறிப்பிட்ட வீரர்கள் நிச்சயம் தேவை. அதுபோல ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர். இவர் போன்ற வீரர்கள் உலகக் கோப்பை அணியில் நிச்சயம் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என நெஹ்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வதற்கு சில காரணங்களை நெஹ்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தவான் மட்டுமே இடது கை ஆட்டக்காரர். ஒரு அணிக்கு இடது-வலது பேட்ஸ்மேன் கூட்டணி நிச்சயம் தேவை. இதை ரிஷப் பண்ட் மிக சிறப்பாக செய்வார்.

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இக்கட்டான சூழலில் ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிக்க கூடியவர். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகிய மூவரும் தற்போது மேட்ச் வின்னர்களாக உள்ளனர். அந்த வரிசையில் ரிஷப் பண்ட்டும் மேட்ச் வின்னராக இருப்பார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுக்க இது போன்ற காரணங்களை நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Tags : #TEAMINDIA #RISHABHPANT #ASHISHNEHRA #WORLDCUP2019