ஒரு நாள் போட்டியிலிருந்து,'அதிரடியாக நீக்கப்பட்ட வீரர்கள்'...பிசிசிஐயின் முடிவால்,அதிர்ச்சியில் வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 11, 2019 06:30 PM

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசியதாக எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து,ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஆகியோருக்கு முதல் ஒருநாள் போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது.

Hardik Pandya, K L Rahul out from 1st ODI

பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,பிரபல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டா் ஹா்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள்.இந்நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து வரம்பு மீறி பேசியதாக கடும் சர்ச்சை வெடித்தது.

அதுமட்டுமல்லாமல் சச்சின், விராட் கோலி இவா்களில் யாா் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு இருவரும் விராட் கோலி என பதில் அளித்தனா். இதனால் கடுப்பான  ரசிகா்கள், சச்சின், தோனியை விட கோலி சிறந்தவர் இல்லை என,ட்விட்டரில் இருவரையும் ஒரு வழி ஆக்கிவிட்டார்கள்.

இதனிடையே கடுமையாக எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ஹா்திக் பாண்டியா யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் சா்ச்சைக்குரிய கருத்து குறித்து ஹா்திக் பாண்டியாவும்,கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையடுத்து இருவரும் பிசிசிஐயிடம் விளக்கம் அளித்தனர்.ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.இந்நிலையில் வரம்புமீறி பேசியதற்காக ,ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஆஸ்திரேலியவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பபட உள்ளது.