All
Looks like you've blocked notifications!

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் பினு கூறியதாவது:

 

நான் பெரிய ரவுடி இல்லை. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் திருந்தி வாழ ஆசைப்பட்டு கடந்த 3 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தேன். என்னுடைய 50-வது பிறந்தநாளைக் கொண்டாட கரூரில் இருந்து எனது தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பினுவை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

BY MANJULA | FEB 13, 2018 2:45 PM #BIRTHDAYPARTY #BINU #பிறந்தநாள்கொண்டாட்டம் #பினு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People