All
Looks like you've blocked notifications!

கடந்த 11-ம் தேதி, குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32) என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். ஜெயஸ்ரீ-யின் மரணத்தைத் தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.

 

இவர், சென்னையில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People