All
Looks like you've blocked notifications!

மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

முற்றிலும் வெண்ணிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் உடல், இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வாகனத்தின் முகப்பில் ஸ்ரீதேவியின் உருவப்படம் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது.

 

அந்தேரி செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வில்லே பார்லே மயானத்திற்கு, ஸ்ரீதேவியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

 

முன்னதாக மகாராஷ்டிர அரசு மரியாதையுடன், ஸ்ரீதேவி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People