All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நடைமுறை பரிசோதனைகள் காரணமாக, நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும்,ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீஸ் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.

 

இந்த நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் முன்னணி ஊடகமான கலீஜ் டைம்ஸ் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

அதில், " போனி கபூர் விசாரணைக்காக அழைத்து செல்லப்படவில்லை என்றும், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக போலீசாரிடம் அவர் சாட்சி மட்டுமே அளித்ததாகவும்,''   தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 27, 2018 10:53 AM #SRIDEVI #BONEYKAPOOR #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #போனிகபூர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People