All
Looks like you've blocked notifications!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி(45), தனது கடைசி மகன் தனயன் மற்றும் மகள் தனமுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

 

அப்போது, திடீரென வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேரையும் ஆயுதங்களால் சராமாரியாகத் தாக்கினர். இதில் சிறுவன் தனயன் சம்பவ இடத்திலேயே இறக்க, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்திற்கு நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதில், " விழுப்புரம் சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா? நம் முற்றத்தை சீர்செய்யாத நாம் சிரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது?," இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 26, 2018 6:53 PM #PRASANNA #VILLUPURAM #பிரசன்னா #விழுப்புரம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People