All
Looks like you've blocked notifications!

காஞ்சிபுரம் பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லம் மூடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜோசப் கருணை இல்லத்தில் இறந்த முதியவர்கள் உடம்பின் எலும்பிலிருந்து மருந்து எடுக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து  மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்திருந்தனர்.

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி காப்பகத்தில் தங்கியிருந்த முதியவர்களை வேறு காப்பகங்களுக்கும், வீட்டுக்கு செல்ல விரும்புவோரை அவர்களுடைய சொந்த வீட்டிற்க்கும்  அனுப்பியுள்ளனர்.

 

மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட 40 முதியவர்களை மனநல காப்பகத்திற்கும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த கருணை இல்லம் மூடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | FEB 26, 2018 6:27 PM #KANCHIPURAM #ORPHANAGE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People