All
Looks like you've blocked notifications!

டெல்லி சிறையில் இருந்த தில்லோ என்னும் பிரபல ரவுடி பல் தொடர்பான பிரச்சினைக்காக, மருத்துவரை பார்க்க 2 போலீசாருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

அங்கு மருத்துவரை சந்தித்து விட்டு போலீசாருடன் தில்லோ திரும்பியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு தில்லோவை மீட்டுச் சென்றுள்ளனர்.

 

எனினும் உடனடியாக கண்களைத் துடைத்துக்கொண்டு போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அதற்குள் அவர்கள் தில்லோவுடன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

சினிமா பாணியில் போலீசாரின் கண்களில் 'மிளகாய்ப்பொடி' தூவி ரவுடியை அவரது நண்பர்கள் மீட்டுச்சென்ற சம்பவம், டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | FEB 22, 2018 5:33 PM #POLICE #CHILLIPOWDER #போலீஸ் #மிளகாய்ப்பொடி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People