செல்போனுக்காக சிறுவனை கொலை செய்த இளைஞன்!
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 10, 2018 02:25 PM

வேலூர் மாவட்டம் அழகாபுரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகனை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போனுக்காக கொலை செய்துள்ளார்.
ஆம்பூரின் அழகாபுரி 2-வது தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கரின் மகன் கிஷோர் (8), கடந்த 5-ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கிஷோரைத் தேடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர், சம்பவதினத்தன்று சிறுவன் கிஷோரிடம் இருந்து செல்போனை பிடுங்கி விட்டு, அதனை மறைப்பதற்காக கிஷோரை கிணற்றில் தள்ளியுள்ளார்.
அந்த செல்போனை தனது நண்பரிடம் ரூ.2000-க்கு விற்ற விக்னேஷை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth killed 8 year old boy for cellphone | தமிழ் News.