MIC Conclave BNS Banner

சிக்கன் உணவால் நடந்த கொலை! நிச்சயதார்த்த விழா சோகம்!

Home > News Shots > தமிழ்

By |
Man kills his cousin for chicken curry

ஐதராபாத்தைச் சேர்ந்த அன்வர், தனது உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவருடைய உறவினரான அஷ்பக் அலி கான் வந்துள்ளார்.

 

திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்ததும், எல்லோருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டுள்ளது.

 

உணவு வேளை முடிந்து தாமதமாக வந்த அஷ்பக், தனக்கு சிக்கன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், சிக்கன் ஏற்கனவே காலியானதாகக் கூறப்படுகிறது.

 

எனவே, அன்வர் அஷ்பக்கிடம், சிக்கன் இல்லாததால் வேறு உணவை சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

 

தனக்கு சிக்கன் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அஷ்பக், தனக்கு சிக்கன் தான் வேண்டும், என தகராறு செய்துள்ளார்.

 

தகராறு முற்றிய நிலையில், தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்த அஷ்பக், அவர்களுடன் சேர்ந்து அன்வரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

 

ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #MURDER #CHICKENCURRY

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man kills his cousin for chicken curry | தமிழ் News.