All
Looks like you've blocked notifications!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கொன்று புதைத்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து பாலிமர் டிவி செய்தி வெளியிட்டுள்ள செய்தியின்படி, கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜசேகர் கடந்த 2007-ம் ஆண்டு மாயமானார் என்றும், இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ரவி பள்ளியாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

தனிப்படை அமைத்துத் தேடியும் ராஜசேகரைக் கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை. தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு பள்ளியாடி காவல் நிலையத்தில் மீண்டும் ரவி புகார் அளித்தார். மிகுந்த சவாலாக இருந்த வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என நினைத்த போலீசார், விசாரணையை பல்வேறு கோணங்களில் திருப்பினர்.

 

ஒருகட்டத்தில் அவரது மனைவி சுதா, போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை, சுதா தனது காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்து நாடகம் ஆடிய விவரம் தெரியவந்தது.

 

சுதா அளித்த தகவலின்படி, கழிவுநீர்த்தொட்டியில் கொன்று புதைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் 11 ஆண்டுகளுக்குப்பின், தற்போது எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 17, 2018 7:26 PM #WOMEN #MURDER #HUSBAND #மனைவி #கணவன் #கொலை #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People