All
Looks like you've blocked notifications!

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கி, சுமார் 5  பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 27 பேர் பல்வேறு விதமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சுமார் 10 அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிவதாகவும், பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

 

இரு வேறு குழுக்களைச் சேர்ந்த 36 பேர் காட்டுத் தீயில் சிக்கியுள்ளதாகவும், அதில் ஒரு குழுவைச் சேர்ந்த 12 பேர் ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும், இன்னொரு குழுவைச் சேர்ந்த 24 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

 

இந்த காட்டுத் தீயில் 3 குழந்தைகளும் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People