All
Looks like you've blocked notifications!

நிதி நெருக்கடியால் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிட, ஏர்செல் நிறுவனம் தொடர்ந்து தடுமாறி வருகிறது.

 

இந்தநிலையில், சிக்னல் பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடாக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செல்போன் சேவை வழங்க தற்காலிக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக, ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து ஏர்செல் தென்னிந்திய தலைவர் சங்கர நாராயணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ (சர்வர்) முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்கு செல்வார்கள்.

 

தற்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரை பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக் கொள்ளலாம். போர்ட் அவுட் முறையை பயன்படுத்திக்  கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது," என்றார்.

BY MANJULA | FEB 23, 2018 11:49 AM #TAMILNADU #AIRCEL #AIRTEL #தமிழ்நாடு #ஏர்செல் #ஏர்டெல் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People