96 India All Banner
Ratsasan All Banner

திருப்பரங்குன்றம்-திருவாரூரில் தேர்தல் இல்லை; 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 06, 2018 04:31 PM
No ByPoll in TN and elections will be held in these 5 staes, EC Said

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தற்போதைய நிலையில் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக திமுக-சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அடுத்து வரும் பருவமழை காரணமாகவும் இப்போதைக்கு தேர்தல் நடத்தும் யோசனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

5 மாநில சட்டசபை சட்டமன்றத் தேர்தல்களை பொருத்தவரை மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ம் தேதியும் ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகாவின் ஷிமோகா, பெல்லரி, மாண்டியா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதியும், இரண்டு கட்டமாக நடக்கவுள்ள சட்டீஸ்கர் தேர்தல் முறையே நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20-ல் நடக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளார். அனைத்து தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : #5STATESELECTION #ELECTIONCOMMISSIONOFINDIA #TAMILNADU #BYPOLLELECTION #OMPRAKASHRAWAT