All
Looks like you've blocked notifications!

தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் கமல், மதுரையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசனின் புதிய கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

கமல் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கு, திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகை காயத்ரி ரகுராமும் இணைந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் " என்னுடைய தந்தை எப்போதும் கமல் குறித்து பெருமையாகப் பேசுவார். அதேபோல கமல் அரசியலுக்கு வருவார் என்றும், அவர் ஒரு சிறந்த தலைவராகத் திகழ்வார் எனவும் என் சிறுவயது முதலே கூறுவார்.

 

நானும் கமலை நினைத்து பெருமைப்படுகிறேன். தற்போது அவருக்குப் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. நாம் அவருக்காகப் பிரார்த்திப்போம்," என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 23, 2018 4:53 PM #GAYATHRIRAGHURAMM #KAMALHAASAN #காயத்ரிரகுராம் #கமல்ஹாசன் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People