All
Looks like you've blocked notifications!

'கபாலி' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பித் தரவில்லையெனில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விநியோகஸ்தர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, விநியோகஸ்தர் செல்வக்குமார் இன்று சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில், "என் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். எனது மனைவியின் தாலியை அடகு வைத்துத் தான், இந்த இடத்தில் நான் வந்து உட்கார்ந்து இருக்கிறேன்.

 

'கபாலி' படத்தின் தென் ஆற்காடு மற்றும் புதுச்சேரி உரிமையை ரூ.5.50 கோடிக்கு பெற்றதில் ரூ.2.72 கோடி நஷ்டம் ஏற்பட்டது.நஷ்டத்தில் ரூ.1.50 கோடியை திருப்பித் தருவதாக தயாரிப்பாளர் தாணு வாக்குறுதி அளித்தார்.

 

ஆனால், அளித்த வாக்குறுதியின்படி நஷ்டத்தை அவர் தராமல் இழுத்தடித்து வருகிறார். கடன் அளித்தவர்கள் எனக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

 

தயாரிப்பாளர் தாணு பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAR 2, 2018 3:47 PM #RAJINIKANTH #RAJINI #KABALI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People