#METOO சில பேரின் பெயர்களைப் பார்த்து 'ஷாக்' ஆகிவிட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 23, 2018 11:00 AM
Isai Puyal AR Rahman talks about MeToo movement

சமீபகாலமாக  சமூக வலைதளங்கள், பொது இடங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக #MeToo நிகழ்வுகள் இருக்கிறது. சின்மயி, லீனா மணிமேகலை,லட்சுமி ராமகிருஷ்ணன் என பிரபலங்களும் இதுகுறித்து பேசி வருகின்றனர்.

 

இதனைப்பார்த்து பாதிக்கப்பட்ட பெண்களும் சமூக வலைதளங்கள் வழியாக தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் #MeToo குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக கருத்து தெரிவிசித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' #MeToo நிகழ்வுகளைக் கவனித்து வருகிறேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்ட்டவர்கள் என சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

இந்த துறை பாதுகாப்பானதாக மாற வேண்டும் என நினைக்கிறேன். தைரியமாகப் பேசும் அனைவருக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பணியாற்றும் வகையில் நானும் எனது அணியும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கின்றன. அதனை யாரும் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்,'' என தெரிவித்துள்ளார்.

Tags : ##METOO #ARRAHMAN