MIC Anthem Mobile BNS Banner
விபத்தில் பலியான மருத்துவ தம்பதியர்: கிருஷ்ணகிரி அருகே சோகம்

கிருஷ்ணகிரி அருகே லாரி மோதி கார் விபத்துக்குள்ளானதில், மருத்துவ தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த மருத்துவ தம்பதியர் ராமச்சந்திரன்-அம்புஜம் இருவரும், கிருஷ்ணகிரி வழியாக காரில் பெங்களூரில் சென்று கொண்டு இருந்தனர். அதே நேரம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ஓசூருக்கு லாரி ஒன்று தேங்காய் ஓடு ஏற்றிக்கொண்டு சென்றது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்னும் இடத்தில் வந்த போது தம்பதியர்கள் வந்த கார், லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமச்சந்திரன்-அம்புஜம் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

தகவலறிந்து விரைந்து வந்த, சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தற்போது, இந்த விபத்து குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories