MIC Anthem Mobile BNS Banner
ரஜினி காட்டுவது பாபா முத்திரை கிடையாது, ஆட்டுத்தலை: சரத்குமார் விமர்சனம்

தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை எதிர்த்து சரத்குமார் தலைமையில், சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில் " காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு என்ன? தமிழகத்திற்கு ஆதரவா?கர்நாடகத்திற்கு ஆதரவா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

 

தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது எனக்கூறிவிட்டு, பயந்து அமெரிக்காவுக்கு ஓடியவர் ரஜினி. அவர் காட்டுவது பாபா முத்திரை அல்ல, ஆட்டுத்தலை" என நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சரத்குமார், பொதுக்கூட்ட மேடை வரை சைக்கிள் ஓட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories