MIC Anthem Mobile BNS Banner
செருப்பால் அடித்து காதலனைத் 'திருமணம்' செய்த பெண்

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த திவ்யபாரதியும், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், திவ்யாவைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய சந்திரசேகர், ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

 

இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, சந்திரசேகரின் உறவினர்கள் முன்னிலையில் வைத்து அவரை செருப்பால் அடித்தார். தொடர்ந்து காவல் நிலையத்திலும் சந்திரசேகர் மீது திவ்யா புகார் அளித்தார்.

 

புகாரையடுத்து சந்திரசேகரை விசாரித்த போலீசார் இருவருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள கோவிலில்  திவ்யபாரதி-சந்திரசேகர் இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டனர்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories