MIC Conclave BNS Banner

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வயல்வெளியில் வீசப்பட்ட 16 வயது சிறுமி!

Home > News Shots > தமிழ்

By |
Woman alleges gang rape; four arrested

சிதம்பரம் அருகே உள்ள பரதூர் கிராமத்தில், 16 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வயல்வெளி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற அந்த சிறுமி, மாலை வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அந்த பகுதி முழுவதும் அவரை தேடியுள்ளனர்.

 

இந்நிலையில், இன்று காலை ஊருக்கு வெளியே உள்ள ஒரு வயல்வெளியில், அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து, அந்த சிறுமியின் பெற்றோர் தன் மகளை அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் ஒரத்தநாடு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Tags : #RAPE

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman alleges gang rape; four arrested | தமிழ் News.