All
Looks like you've blocked notifications!

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் திகார்  சிறையிலடைக்க நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீதிமன்ற உத்தரவைப் பெற காத்திருந்த கார்த்தி சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் எனது பசியை இழந்துவிட்டேன். மிகவும் குறைவான உணவே சாப்பிடுகிறேன். இதனால்  உடல் எடை குறைந்துள்ளது, இதுவும் நல்லது தான்.

 

என் பழைய ஆடைகள் உடல் எடை குறைந்ததால் தளர்வாகி விட்டன. இதனால் புதிய ஆடைகள் தேவைப்படுகிறது. எனவே யாராவது உடல் எடை குறைக்க வேண்டுமென்று விரும்பினால் சிபிஐக்கு டயல் செய்யுங்கள்", இவ்வாறு அவர் தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People