All
Looks like you've blocked notifications!

நேற்று, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்  உடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்து  உரையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.

 

அப்போது பல்வேறு கருத்துக்களை கூறிய ரஜினிகாந்த், அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாகவும் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்களிடமிருந்து தான் அரசியல் கற்றதாகவும் தெரிவித்தார்.

 

ரஜினியின் அரசியல் உரை குறித்து இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு, "ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்குக் கிடைப்பதில்லை. ரஜினியின் பேச்சு முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. பத்திரிக்கைகளில் ஒரு வார்த்தை விலகாமல் பதிவு செய்யப்படுகிறது", என்று தமிழிசை பதிலளித்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People