All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம், இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது, பல்வேறு நடைமுறைகளுக்காக ஸ்ரீதேவியின் உடல் துபாய் காவல்துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

BY MANJULA | FEB 25, 2018 2:02 PM #SRIDEVI #SRIDEVIDEATH #MUMBAI #DUBAI #ஸ்ரீதேவிமரணம் #மும்பை #துபாய் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People