Biggest Icon of Tamil Cinema All Banner

பால் டேம்பரிங் புகாரால்...களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்

Home > News Shots > தமிழ்

By |
Sri Lanka players refuse to take field against WI

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.

 

2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை வீரர் தனஞ்ஜெய டிசில்வா பந்தை சேதப்படுத்தியதாக அம்பயர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து வீரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டத்தின்போது பந்தை மாற்ற அம்பயர்கள் முடிவு செய்தனர்.

 

இதனால் ஆட்டத்திற்கு வராமல் இலங்கை வீரர்கள் டிரஸ்ஸிங் அறையிலேயே இருந்தனர். இதனைத்தொடர்ந்து போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் இலங்கை கேப்டன் சண்டிமால் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் போட்டியைத் துவக்கினார்.

 

இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைபட்டது. மேலும் இலங்கை வீரர்களுக்கு அபராதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசி, ''பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும்,'' என இலங்கை வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #SRILANKA #CRICKET #SLVSWI

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri Lanka players refuse to take field against WI | தமிழ் News.