All
Looks like you've blocked notifications!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் தனது அபார  பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் சுரேஷ் ரெய்னா.

 

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுரேஷ் ரெய்னாவிடம் தனக்கு பிடித்தது களத்தில்  அச்சமின்றி ஆடும் திறன் தான் என்று கூறியுள்ளார்.

 

மேலும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் நீண்ட காலம் அனுபவம் கொண்டவர் என்றும், அந்த அனுபவத்தால் தான் என்ன செய்ய முடியும் என்பதை காண்பித்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா, தன் இடத்தை தக்க வைக்கும் நோக்கில் அழுத்தமாக   பேட்டிங் செய்யாமல், தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடியது சிறப்பாக இருந்தது எனவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People