All
Looks like you've blocked notifications!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது அம்மாவின் பிரிவு குறித்த நெகிழ்ச்சியான பதிவொன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில், "வரப்போகிற என் பிறந்த நாளையொட்டி, நான் உங்கள் எல்லோரிடமும் கேட்பது ஒன்றுதான். உங்கள் பெற்றோரை நேசியுங்கள் என்பதுதான் அது. அந்த அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். ஏனெனில், பெற்றோர்கள்தானே நம்மை உருவாக்கியவர்கள்.

 

நான் உங்களை (ஸ்ரீதேவி) கண்டிப்பாக பெருமையடையச் செய்வேன். ஒவ்வொரு காலையும் உங்களை என்றாவது பெருமையடைய செய்வேன் என்ற நம்பிக்கையில் எழுவேன். இதே எண்ணத்துடன் ஒவ்வொரு நாளும் எழுவேன் என, நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன்.

 

நீங்கள் என்னுடன் தான் இருக்கிறீர்கள். என்னால் அதை உணர முடிகிறது. நீங்கள் எனக்குள், குஷி மற்றும் அப்பாவுக்குள் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களை விட்டுச் சென்றது என்னை மேலும் வலுப்படுத்தியுள்ளது. என் எல்லாமாகவும் உங்களை நான் நேசிக்கிறேன்'' என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

வரும் மார்ச் 7-ம் தேதி, ஜான்வி தனது 21-வது வயதில்  அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காலம் உனது காயங்களை ஆற்றட்டும் கண்ணே...

BY MANJULA | MAR 3, 2018 5:31 PM #SRIDEVI #JANHVIKAPOOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People