All
Looks like you've blocked notifications!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் கடந்த 28-ம்(பிப்ரவரி) தேதி மகாராஷ்டிர அரசின் முழு மரியாதையுடன், மும்பை வில்லே பார்லே மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஸ்ரீதேவியின் அஸ்தியுடன் நேற்று தனி விமானத்தில் மும்பையிலிருந்து-சென்னைக்கு மகள்கள் ஜான்வி, குஷி-யுடன் போனி கபூர் வந்ததாகவும், நேற்று நீலாங்கரையில் உள்ள பண்ணை வீட்டில் அவர்கள் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

 

இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் போனி கபூர் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில், ஸ்ரீதேவியின் அஸ்தியைக் கரைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

BY MANJULA | MAR 3, 2018 1:13 PM #SRIDEVI #BONEYKAPOOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People