All
Looks like you've blocked notifications!

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சண்முகப் பிரியா, இன்று காலை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய கணவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

 

வீட்டின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் சண்முகப் பிரியாவை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் சண்முகப் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.



மேலும், சண்முகப் பிரியாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியும் திருடப்பட்டுள்ளது. சண்முகப் பிரியாவின் கணவர் மோகன்ராஜா மீது சந்தேகமுற்ற போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 19, 2018 4:00 PM #MURDER #TAMILNADU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People