All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீதேவி மரணத்துக்கு தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், ''மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. 

 

இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்," என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

கமல்-ஸ்ரீதேவி இணைந்து நடித்த 'மூன்றாம் பிறை' படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இப்படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கொடுத்தபோது, ஸ்ரீதேவிக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 25, 2018 10:58 AM #SRIDEVIDEATH #KAMALHAASAN #ஸ்ரீதேவிமரணம் #கமல்ஹாசன் #SRIDEVI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People