தனது சாதனைக்காக 'வெட்கப்பட்ட' பிரபல வீரர்.. அப்படி என்ன சாதித்தார்?

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: It’s a little bit embarrassing to be honest says Aaron Finch

நடப்பு ஐபிஎல்லில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு சாதனைக்காக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச், புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

 

அதாவது இதுவரை நடைபெற்ற மொத்த ஐபிஎல் போட்டிகளிலும் அதிக அணிக்காக விளையாடியவர் என்ற, வித்தியாசமான சாதனையை ஆரோன் படைத்துள்ளார்.

 

இதுவரை மும்பை, குஜராத், ராஜஸ்தான், புனே, டெல்லி, சன்ரைசர்ஸ், பஞ்சாப் என மொத்தம் 7 அணிகளுக்காக, ஆரோன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை, பெங்களூர், கொல்கத்தா அணிகளுக்காக மட்டும் தான் பிஞ்ச் இதுவரை விளையாடவில்லை.

 

இதுகுறித்து அவர், "எனக்கே வெட்கமாகத் தான் உள்ளது. ஆனால் என்ன செய்வது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அணிக்காக விளையாடி வருகிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: It’s a little bit embarrassing to be honest says Aaron Finch | தமிழ் News.