'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Harbhajan Singh wishes Chennai Super Kings

புகைப்பட உதவி @IPL

 

ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் புனேவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜடேஜா,ஹர்பஜன் இருவரும் வெறும் 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாகினர்.

 

இந்த நிலையில் பெங்களூருக்கு எதிரான வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "@ipl எனும் அடர்ந்து படர்ந்து வளர்ந்த காட்டில்  வெற்றிகள் நிகழ்ந்து ராஜனாய் திகழ்ந்த எம்மை இனி இது தொடராது என வினவிய எம் எதிர் சார்ந்த கூட்டத்தின் முன் எம் வெற்றிகள் கண்டு நெகிழ்ந்த எம் ரசிகர்கள் மகிழந்து புகழ்ந்து வாழ்த்து மழை பொழிந்து யாம் நனைந்தது காணீர் @chennaiipl #CSKvsRCB,'' என உலகநாயகன் கமல்ஹாசன் பாணியில் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Harbhajan Singh wishes Chennai Super Kings | தமிழ் News.