ஜார்கண்ட் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில்.. முக்கியக் 'குற்றவாளி' கைது!

Home > News Shots > தமிழ்

By |
Main Accused Arrested In Jharkhand Gang-Rape Case

ஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள ராஜகேந்துவா என்னும் கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அங்குள்ள சில நபர்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்து சிறுமியின் குடும்பத்தார் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பஞ்சாயத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, 4 குற்றவாளிகளுக்கு தலா 100 தோப்புக்கரணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பு அளித்தது.

 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 20 பேர் கொண்ட கும்பலுடன் கடந்த வியாழக்கிழமை இரவு சிறுமியின் வீட்டிற்குள் சென்று பெற்றோரைத் தாக்கியதுடன், சிறுமியையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுதொடர்பாக இதுவரை 16 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், தற்போது இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியையும் கைது செய்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #JHARKHAND

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Main Accused Arrested In Jharkhand Gang-Rape Case | தமிழ் News.