பெங்களூரை வீழ்த்தி.. புள்ளிப்பட்டியலில் மீண்டும் 'முதலிடத்தைத்' தக்க வைத்தது சென்னை!

Home > News Shots > தமிழ்

By |
IPL 2018: CSK beat RCB by 6 wickets in Pune

புகைப்பட உதவி @IPL

 

ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் புனேவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

 

அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 127 ரன்கள் சேர்த்தது.

 

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 59 ரன்களும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர்.சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இலக்கை எட்டியது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக ராயுடு 32 ரன்களும், தோனி 31 ரன்களும் சேர்த்தனர்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2018: CSK beat RCB by 6 wickets in Pune | தமிழ் News.