அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 05, 2018 03:14 PM
India and Russia have signed a deal for 5 Russian S-400 Triumf missile

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இன்று சந்திக்கவுள்ளதாக முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.மேலும் ரஷ்யாவில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் ஆகியவை இன்று கைதாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

 

இதேபோலவே, இந்தியா - ரஷ்யா இடையேயான எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ரஷியாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணையை இந்தியா வாங்குவதற்காக கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் புடின் சந்தித்தபோதே தீர்மானிக்கப்பட்டது.

 

முன்னதாக ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் செய்தால், பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #NARENDRAMODI #AMERICA #INDIA #PUTININDIA #INDORUSSIA #VLADIMIRPUTIN