வெற்றியோ-தோல்வியோ எனது 'அணியை' நான் முழுமையாக நம்புகிறேன்: தினேஷ் கார்த்திக் உருக்கம்

Home > News Shots > தமிழ்

By |
I Have trusted my team says KKR Captain Dinesh Karthik

கொல்கத்தா-மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில்  210 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, விரைவாக விக்கெட்டுகளை இழந்து தோல்விப்பாதைக்கு தள்ளப்பட்டது. முடிவில் அந்த அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

தோல்விக்குப் பின் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், "மும்பை பேட்ஸ்மேன்கள் மிகவும் நன்றாக ஆடினர். உண்மையில் மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டியை அவர்கள் ஆடினர்.

 

இந்தத் தோல்வியை விரைவில் மறந்து அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். எனது அணியினரை நான் முழுமையாக நம்புகிறேன். ஒரு கேப்டனாக இது மிகவும் அவசியமான ஒன்று. கண்டிப்பாக பிளே ஃஆப்க்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. I Have trusted my team says KKR Captain Dinesh Karthik | தமிழ் News.