'நாங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறோம்' சொன்னதைச் செய்த ரோஹித்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Mumbai Indians won 102 runs against KKR

புகைப்பட உதவி @IPL

 

கொல்கத்தா-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில்  210 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, விரைவாக விக்கெட்டுகளை இழந்து தோல்விப்பாதைக்கு தள்ளப்பட்டது.

 

முடிவில் அந்த அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் கொல்கத்தாவைக் கீழிறக்கி மும்பை புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

முன்னதாக பஞ்சாப் அணியை வீழ்த்திய பிறகு நாங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறோம் என, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

 

அதனை நிரூபிப்பது போல தற்போது பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்தி, மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Mumbai Indians won 102 runs against KKR | தமிழ் News.