தமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 16, 2018 04:55 PM
Flood Alert announced in 12 Districts of TN by the GOVT

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது. மேட்டூர், பவானிசாகர், அமராவதியில் இருந்து மொத்தம் 2.8 லட்சம் கனஅடி, மேட்டூர் அணைக்கு 2.1 லட்சம் கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி, கபினியில் இருந்து 65,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, இம்முறைதான், ஒட்டு மொத்தமாக 1.90 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்

 

இதன் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி  தலைமை செயலகத்தில்  துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் வடகிழக்கு பருவமழையினால் உண்டாகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

 

இதனை அடுத்து மேற்கண்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததோடு, கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. 

Tags : #KERALAFLOOD #TNFLOODS #TAMILNADU #TNFLOODALERT