All
Looks like you've blocked notifications!

மதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சியின் பெயரை அறிவித்தார். கமல்ஹாசனின் கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

 

தமிழகம் இரு கட்சிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளை நிராகரித்து விட்டு கமல்ஹாசனை  ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். அரசியல் மாற்றாக உருவாகியுள்ள கமல் கட்சிக்கு தமிழக மக்கள் இனி வாக்களிக்கலாம்.

 

அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக கமல் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிற தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

BY MANJULA | FEB 21, 2018 10:09 PM #KAMAL #MAKKALNEEDHIMAIAM #கமல் #மக்கள்நீதிமய்யம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People