MIC Anthem Mobile BNS Banner
விஜய்-அஜீத் இருவருமே உணர்வுப்பூர்வமானவர்கள்: பிரபல தொகுப்பாளர்

நடிகர்கள் விஜய்-அஜீத் இருவருமே மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள் என, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சமீபத்தில் நமக்கு அளித்த பேட்டியில் " அஜீத்-விஜய் இருவரையும் தனிப்பட்ட முறையில் நான் பேட்டி எடுத்துள்ளேன். அஜீத் குறித்து விஜய்யும், விஜய் குறித்து அஜீத்தும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவிப்பார்கள்.

 

ஒருவர் மீது மற்றவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இருவருமே மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள். இரண்டு பேருமே தங்களுடைய நேரத்தை அவர்களுடைய குழந்தைகளுக்கு ஒதுக்குகின்றனர்.

 

நடிகர்களுக்கு இடையேயான போட்டி இயல்பானது தான். ஆனால் ஒரு நடிகரைப் பற்றி பிற நடிகர்கள் தவறாகப் பேச மாட்டார்கள்", என தெரிவித்துள்ளார்.  

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories