MIC Anthem Mobile BNS Banner
பாலியல் தொந்தரவு: நடிகை அமலாபால் ஆவேசம்

 

சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் அமலாபால் புகார் அளித்தார்.

 

அமலாபாலின் புகாரைத் தொடர்ந்து 1 மணி நேரத்தில் தொழிலதிபர் அழகேசனைக் கைது செய்த போலீசார் அவர்மீது பெண் வன்கொடுமை சட்டம்  உட்பட ,  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இதுகுறித்து பேசிய அமலாபால் " தி.நகரில் உள்ள நடனப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அங்கு வந்த தொழிலதிபர் அழகேசன் பாலியல் ரீதியாக தொந்தரவு அளிக்கும் வகையில் என்னிடம் பேசினார்.

 

தனியாக வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் எதற்காக வாழ்கிறோம்?. இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறைக்கு நன்றி" என்றார்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories