All
Looks like you've blocked notifications!

சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக, நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து காவல்துறை அந்தத் தொழிலதிபரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், தன்னையும்-தனது மேனேஜரையும் குறித்து தவறான தகவல் பரப்புவதாக நடிகை அமலாபால் ஆவேசப்பட்டிருக்கிறார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள்.

 

விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 12, 2018 7:46 PM #AMALAPAUL #SEXUAL HARASSMENT #அமலாபால் #பாலியல்தொந்தரவு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People