Aiden Markram
AIDEN MARKRAM

இது தவிர, சீனியர் வீரர்கள் இல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அணியாக, சிஎஸ்கேவை உருவாக்க நினைத்தால், சில இளம் தொடக்க வீரர்களையும் சிஎஸ்கே தேர்வு செய்து ஆடலாம். இதில் முதல் வீரர் என்றால், தென்னாப்பிரிக்க வீரர் எய்டென் மார்க்ரம் தான்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியில், அதிரடியாக ஆடிய மார்க்ரம், ஐபிஎல் ஏலத்தில் ஒரு ரவுண்டு வருவார் என அப்போதே பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்திய மைதானங்களில், மார்க்ரம் ஆடியதில்லை என்பது மட்டும் தான் ஒரே குறை. இருந்தாலும், மிடில் ஓவர்களில் சிறப்பாக திட்டம் போட்டு, ரன்கள் எடுப்பதில் மார்க்ரம் வல்லவர் என்பதால், அவரும் சென்னை அணிக்கு சிறந்த தேர்வாக தான் இருப்பார் என கருதப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், டு பிளஸ்ஸிஸை சிஎஸ்கே அணியால் ஒரு வேளை எடுக்க முடியாமல் போனால், அந்த இடத்திற்கு மார்க்ரம் பொருத்தமான வீரராக இருப்பார் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.