காயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்!

Home > News Shots > தமிழ்

By |
The IPL Trophy dedicated to Tamilnadu People says Harbhajan Singh

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரசிகர்களை சந்திக்க கோப்பையுடன் சென்னையை வந்தடைந்துள்ளனர். இந்த நிலையில் காயங்களுக்கு ஆறுதலாக இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என, சென்னை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த @ipl கோப்பையை @ChennaiIPL மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு  வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு #நன்றி,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The IPL Trophy dedicated to Tamilnadu People says Harbhajan Singh | தமிழ் News.