'சென்னை ரசிகர்கள் மீதான அன்பு ஒருபோதும் குறையாது'... சூப்பர் கிங்ஸ் வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Still we have a lots of love and care for our csk fans says Jadeja

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் நேற்று முதன்முறையாக மோதின.

 

ஆனால் காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

 

மேலும் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணா சாலை அருகே நேற்று தொடர் போராட்டம் நடைபெற்றதால், கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

 

இதுதவிர போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைதானத்துக்குள் காலணிகள் வீசி எறியப்பட்டன. இதனால் ஆட்டம் சுமார் 2 நிமிடங்கள் தடைபட்டது.

 

இந்த நிலையில் மைதானத்துக்குள் எறியப்பட்ட காலணிகள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜடேஜா பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "இவ்வளவுக்குப் பின்னரும் சிஎஸ்கே ரசிகர்கள் மீதான எங்கள் அன்பும், அக்கறையும் குறையவில்லை,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Still we have a lots of love and care for our csk fans says Jadeja | தமிழ் News.